இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது சி.எம்.எஸ் செயற்கைக்கோள்…!

rocket 2025

LVM3-M5 ராக்கெட் மூலம் சி.எம்.எஸ்-3 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை ஏவப்படுகிறது. இன்று மாலை 5.26 மணிக்கு 4,410 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சி.எம்.எஸ் -விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோ கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்கான சிஎம்எஸ் 3 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று அனுப்புகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகளால் ரூ.1,600 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த தகவல் தொடர்புசெயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கி.மீ தூரம், அதிகபட்சம் 29,970 கி.மீ தொலைவு கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 3.56 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி இறுதிகட்ட பணிகளில்இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் தயாராகியுள்ள இந்த செயற்கைக்கோள் இந்திய கடற்படை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

Vignesh

Next Post

இண்டர்வியூ சென்ற இளம்பெண் காட்டுக்குள் சாம்பலாக கண்டுபிடிப்பு..!! பக்கத்தில் பீர் பாட்டில்கள்..!! திருச்சியை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி..!!

Sun Nov 2 , 2025
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி என்பவரது மகள் மீரா ஜாஸ்மீன் என்பவர், வேலைக்கு இண்டர்வியூக்கு சென்ற நிலையில், சாமங்கலம் காப்புக் காட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் அந்தோணி சாமி – கலா தம்பதியினர், தங்கள் மகள் மீரா ஜாஸ்மீனின் உயர்கல்விக்காகத் தற்போது குடும்பத்துடன் திருச்சி மாநகர் சீனிவாச நகர் பகுதியில் வாடகைக்குக் குடியேறியுள்ளனர். மீரா ஜாஸ்மீன், திருச்சியில் […]
Thiruchy 2025

You May Like