#கன்னியாகுமரி: மோட்டார் சைக்கிள் இல்லை.. விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவன்..!

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குரும்பனை வயல் காலனியில் வசித்து வருபவர் மைக்கேல் ராஜ். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு ஒரு மகன் அஜேஷ்குமார் எனபவர் உள்ளார். 


மகன் தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில், கல்லூரியில் இருந்து திரும்பிய அஜேஷ், தனக்கு படிக்க பிடிக்கவில்லை என்று தனது தாயிடம் கூறிவிட்டு, அடுத்த மாதமே கடலில் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது அஜேஷ் தனக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது தாயிடம் கேட்டுள்ளார்.

குமாரின் அப்பா இரண்டு நாட்களில் ஊருக்கு வருவார், அவர் வந்ததும் வாங்கித் தருவதாக அம்மா சொல்லியுள்ளார். ஆனால் மனமுடைந்த குமார் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#வேலூர்: நிலத்தை உழவும் போது விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

Thu Dec 22 , 2022
வேலூர் மாவட்ட  பகுதியில் உள்ள மலைச்சந்து கிராமத்தில் விவசாயியான சிலோர்மணி (எ) மணிகண்டன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக தனது டிராக்டரை வைத்து உழுது கொண்டிருந்துள்ளார்.  அப்போது ஒரு வாய்க்காலிருந்து மற்றொரு கால்வாயிக்கு செல்வதற்காக கால்வாயின் கரையில் டிராக்டரை ஏற்றியபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், […]
n45439726616716854642048ccb157aff8964deeb052a2f67843889cc710d0c55b885364e8b821cbc2764d5

You May Like