பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, நாட்டில் சில முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒடிசா மாநிலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அடுத்த ஆண்டு (2024) மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர், இந்த ஆண்டு 4ஜி சேவையும், அடுத்த 2024ஆம் ஆண்டு 5ஜி சேவையும் வேகமாக வெளிவருவதை காண்போம்” என்று தெரிவித்தார்.