சசிகலாவின் வீட்டில் பரபரப்பு.. மருமகள் தற்கொலை முயற்சி.!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சகோதரனின் மகன் விவேக், தன்னுடைய மனைவியுடன் எம்ஆர்சி நகரில் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். விவேக்- கீர்த்தனா தம்பதிக்கு சசிகலாவின் தலைமையில் தான் திருமணம் நடந்தது.


கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பற்றி திருமணத்தை நடத்தி வைத்த சசிகலாவிடம் பலமுறை கூறியதாகவும் விவேக்கை அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த மனைவி கீர்த்தனா வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, விவேக் மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மேலும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை அளித்த தகவலின்படி பட்டினப்பாக்கம் போலீசார் இதில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை.!

Fri Nov 11 , 2022
தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார். மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் […]
images 33

You May Like