பிரச்சாரத்தின்போது திடீரென மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி..!! பெரும் பரபரப்பு..!!

கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, அதிமுகவின் தங்கவேல், பாஜகவின் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தற்போதைய கள நிலவரப்படி கரூரில் திமுக – அதிமுக – பாஜக இடையே போட்டி கடுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, திடீரென மயங்கி விழுந்தார். கடும் வெயிலின் தாக்கத்தால் பிரச்சாரத்தின்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார் ஜோதிமணி. இதையடுத்து, அவருக்கு தண்ணீர் கொடுத்து, ஓய்வெடுக்கச் செய்துள்ளனர். வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வேட்பாளர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More : ’Bournvita’ ஆரோக்கிய பானம் இல்லை..!! உடனே நீக்குங்கள்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

உள்ளாடைகளை வேலியில் தொங்கவிடும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?

Sat Apr 13 , 2024
இந்த உலகத்தில் ஏராளமான பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியின் மரபு, காலநிலை, வாழ்வியல் முறைக்கு ஏற்ப அவை மாறுபடும். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான வழக்கத்தை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். நியூசிலாந்தின் கார்டோனா பகுதிக்கு வரும் பெண்கள் தங்களின் பிராவை கழட்டி அங்குள்ள இரும்பு வேலியில் தொங்கவிட்டு செல்கின்றனர். அவ்வாறு அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொடங்கவிடப்பட்டுள்ளன. கார்டோனா நியூசிலாந்தின் மத்திய ஒடோகோவில் உள்ள ஒரு பகுதி. […]

You May Like