மயிலாடுதுறை காங்கிரஸ் MLA ராஜ்குமார் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா அருகில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமாரின் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்கும்படி, போக்குவரத்து காவலர் பிரபாகரன் கூறியுள்ளார். போக்குவரத்து காவலர் பிரபாகரனுடன் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, போக்குவரத்து காவலர் பிரபாகரனை எம்எல்ஏ ராஜ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. என் காரை எடுக்க முடியாது, இங்கு தான் நிற்கும் என எம்.எல்.ஏ ராஜ்குமார் கோபமாக விட்டுச் சென்றுள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க மறுத்ததால் காரின் சக்கரங்களை பூட்டி ரசீது கொடுத்த போக்குவரத்து காவலருடன் எம்எல்ஏ ராஜ்குமாா், அவரது ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. போக்குவரத்து காவலா் பிரபாகரனை அடித்த எம்எல்ஏ ராஜகுமாா் என் காரை எடுக்க முடியாது இங்கு தான் நிற்கும் என விட்டுச்சென்றாா். தகவல் அறிந்து வந்த அண்ணாசாலை போலீசாா் காவல் உயரதிகாாிகளுக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.



