காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு உடல்நலக்குறைவு..! மருத்துவமனையில் அனுமதி…!

sasikanth Senthil 2025

திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


2018 ல் சமக்ர சிக்க்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் சேர்க்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் இணையாதால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழக மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். திருவளளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vignesh

Next Post

கவனம்..! உயிருக்கே உலை வைக்கும் கொசுவர்த்தி சுருள்! புற்றுநோய் ஆபத்து அதிகம்! பாதுகாப்பான மாற்று என்ன?

Sun Aug 31 , 2025
வீட்டில் கொசுக்கள் சுற்றித்திரிவது என்பது பொதுவான பிரச்சனை தான்.. கொசுக் கடியை தடுக்க பலரும் கொசுவர்த்தி சுருள்கள் அல்லது ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துகிறார்கள், இது உடனடி நிவாரணம் தரும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்த கொசுவர்த்தி சுருள்களைப் பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த ரசாயனங்கள் கொசுக்களைக் கொல்வது மட்டுமல்லாமல், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, இது தொடர்பாக எச்சரிக்கை உடன் […]
risks of mosquito coil

You May Like