காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் தெரிந்துவிடும்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்புக்கு 2000ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். நீண்ட காலமாக சோனியாகாந்தி தலைவராக இருநு்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு ராகுல்காந்தி தலைவராக இருந்தார். 2019ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் ராகுல் காந்தி பதவி விலகினார். இடைக்காலத் தலைவராக மீண்டும் சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்களை மேற்கொள்ள வே்டும் என கூறி கபில் சிபல் , குலாம்நபி ஆசாத் போன்ற மூத்த கட்சித் தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகினர். இதனால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை 19ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகின்றது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அக்டோபர் 8ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் முடிவுகள் வெளியாகும். மூத்த தலைவர்கள் சசிதரூர் , ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று மாநில காங்கிரஸ்கட்சிகள் விருப்பம் தெரிவித்தன. இருந்து இது பற்றி தனது நிலைப்பாட்டை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.