“ கோவை, மங்களூரு குண்டுவெடிப்புக்கு நாங்க தான் காரணம்..” ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்…

தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் தங்கள் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக ஈரானின் ஐஎஸ்கேபி என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது…

ஈரானின் குராசன் மாகாணத்தில் செயல்படும் ISKP (Islamic State in Khorasan Province) அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘Voice of Khurasan’ என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.. அந்த கட்டுரையில், தென்னிந்தியாவில், தங்கள் பயங்கரவாதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.. எனினும் எந்த தென் மாநிலத்தில் தங்கள் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என்பது அந்த நாளிதழில் குறிப்பிடப்படவில்லை.. ஆனால் அவர்கள் பெரும்பாலும் கேரளாவில் இருப்பதாகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கோவையில் நடந்த கார் வெடிப்பும், நவம்பர் 19ம் தேதி மங்களூருவில் ஆட்டோரிக்ஷாவில் பிரஷர் குக்கர் வெடித்ததும் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் நடத்தப்பட்டவை என்று ISKP அமைப்பு தெரிவித்துள்ளது.. மேலும் ” கோயம்புத்தூர், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, மங்களூரில் எங்கள் தாக்குதல்களை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லையா.. அங்கு எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக பழிவாங்கினார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளது..

மேலும் ” உங்கள் அத்துமீறல் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டது, இஸ்லாம் மற்றும் அதன் மக்கள் மீதான உங்கள் வெறுப்பு வார்த்தைகளிலும் செயலிலும் காட்டப்பட்டுள்ளது.. இனி, உங்கள் அமைதி குழப்பமாகவும், உங்கள் பாதுகாப்பு பயமாகவும், உங்கள் மகிழ்ச்சி துக்கமாகவும் மாறும், மேலும் அல்லாவின் விருப்பத்தால், நீங்கள் அல்லாவை மட்டுமே வணங்காத வரை, முஸ்லீம் இல்லாத எந்த நபருக்கும் பாதுகாப்போ அமைதியோ இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தி இரண்டு வாரங்களுக்குப் பிறகு ISKP அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

‘Voice of Khurasan’ என்றால் என்ன? மத்திய மற்றும் தெற்காசியாவில் ISIS செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு நாளிதழ் ‘Voice of Khurasan’ ஆகும்… தனது குழுவின் சார்பாக தாக்குதல்களை நடத்த உலகெங்கிலும் உள்ள ஆதரவாளர்களைத் தூண்டுகிறது. இந்த வெளியீடு ISIS மற்றும் அல்-கொய்தா ஆகிய இரண்டின் பயங்கரவாத பணிகளிலும் சேர இளம் தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

1newsnationuser1

Next Post

நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறிய கோபிநாத் காரணம் என்ன…..?

Sun Mar 5 , 2023
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்றுதான் நீயா நானா. இன்னும் சொல்ல போனால் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்களின் மனதில் தனி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல முன்னணி தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். தொடர்ச்சியாக பல சுவாரசியமான தலைப்புகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் […]
Neeya Naana Gobinath Wiki Biography Age Height Weight Body Size Measurements Photos Videos Movies list Net Worth Dob Birth Day News Gossips Affairs 1280x720 1

You May Like