செங்கோட்டை பகுதிக்கு அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதையடுத்து பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாந்தினி சவுக், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய கோயில் உட்பட, குறிவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா IED தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதக் குழு இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
பிப்ரவரி 6 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் நடந்த வெடிப்புடன் இந்த அச்சுறுத்தல் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அந்த அமைப்பு பழிவாங்க முயற்சிக்கும் என்றும், தேசிய தலைநகரில் ஒரு பெரிய அளவிலான பயங்கரவாத சம்பவத்தைத் திட்டமிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தலைநகர் முழுவதும் உள்ள முக்கிய மதத் தலங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் ரேடாரில் முக்கிய மதத் தலங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக முக்கிய கோயில்கள் மற்றும் நெரிசலான சந்தைகளைச் சுற்றி, ஏஜென்சிகள் அதிக கண்காணிப்பைப் பராமரித்து வருகின்றன.



