சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!! சுகாதாரத்துறை அறிவிப்பு

சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்துகள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால் காம்பியா நாட்டில் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து, சோனிபட் நகரில் மெய்டன் பார்மாவுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வு நடத்திய பின் இருமல் மருந்துகள் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!! சுகாதாரத்துறை அறிவிப்பு

மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தான ப்ரோமெத்தாஸைன், கோஃபெக்ஸ் மாலின், மேக்ஆஃப் மற்றும் மேக்ரிப் ஆகிய 4 தயாரிப்புகளில் அளவுக்கு அதிகமான டைஎத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பதாகவும், நச்சுத்தன்மையுடைய இந்த ரசாயனங்கள் குழந்தைகளின் சிறுநீரகத்தை கடுமையாக பாதிப்படைய செய்யும் என்றும் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் அறிவித்தது. இந்த வகை இருமல் மருந்துகளை அமெரிக்க நிறுவனம் மூலம் காம்பியா இறக்குமதி செய்தது. அங்கு 69 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளுக்கும் தொடர்பிருப்பதாக காம்பியா போலீசார் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!! சுகாதாரத்துறை அறிவிப்பு

மெய்டன் நிறுவனம் 3 ஆலைகள் வாயிலாக ஆண்டுக்கு 22 லட்சம் மருந்து பாட்டில்கள், 60 கோடி காப்சூல்ஸ், 1.8 கோடி ஊசி மருந்துகள், 3 லட்சம் ஆயின்மெண்ட் டியூப்ஸ் மற்றும் 120 கோடி மாத்திரைகளை தயாரித்து வருவதாக தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது. இதன் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மெய்டன் பார்மா தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

’ஆன்லைன் ஷாப்பிங்கில் கட்டாயம் இதை செய்யாதீங்க’..!! இல்லையென்றால் பணம் மாயமாகும்..!!

Thu Oct 13 , 2022
பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும். இதனால், ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் […]
ஆன்லைன் ஷாப்பிங்..!! குலுக்கலில் அடித்தது பிரம்மாண்ட பரிசு..!! மக்களே எச்சரிக்கை..!! பல லட்சங்கள் அபேஸ்..!!

You May Like