சர்ச்சைக்குள்ளான ’லியோ’ திரைப்பட பாடல்..!! நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்..!! மிரட்டும் ரசிகர்கள்..?

‘லியோ’ பட பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய்க்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் . இவர் பல விதமான பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் பாடல் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக ஆர்டிஐ செல்வம் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்தார். மேலும், நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரில் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை இயக்கிய நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜயின் பனையூர் முகவரி மற்றும் சாலிகிராமம் முகவரிக்கும் ஆர்.டி.ஐ. செல்வம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸில் போதைப்பழக்கம், ரவுடிசத்தையும் ஊக்குவிக்கும் விதமாக நா ரெடிதான் பாடல் உள்ளதாகவும். இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவரிடம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியதால் நடிகர் விஜயின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆர்.டி.ஐ. செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார். கொலை மிரட்டல் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

CHELLA

Next Post

இனி புற்றுநோயால் உயிரிழப்பே கிடையாது..? அறிமுகமாகும் தடுப்பூசி..!! ஆய்வாளர்கள் சொன்ன செம குட் நியூஸ்..!!

Tue Jun 27 , 2023
புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனா போன்ற தொற்று நோய்கள் வேகமாக பரவி விரைவிலேயே உயிரை பறிக்கும். ஆனால், புற்றுநோயானது நமது உடலுக்குள்ளே மறைந்திருந்து, மெல்ல மெல்ல உயிரை குடிக்கும். உலகளவில் தொற்று நோய்களால் இறப்பவர்களை காட்டிலும் புற்றுநோயால் இறப்பவர்களே அதிகம். எனவே, தொற்று நோய்களை தடுப்பூசி கொண்டு தடுப்பதைப் போல புற்றுநோயையும் தடுப்பூசியால் தடுக்க பல்வேறு ஆய்வுகள் நடந்து […]
128694 cancer

You May Like