அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா … ஜோ பைடன் அறிவிப்பு ….

பெருந்தொற்று நோயானா கொரோனா அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. லட்சக்கணக்கானோர் இதில் உயிரிழந்தனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் ஆங்காங்கே உள்ளது .


இது குறித்து ஜோ பைடன் கூறுகையில் ’’ அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகளை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம் ஆனால் தொற்று நோய் முடிந்துவிட்டது. யாரும் மாஸ்க் அணிவதில்லை. எல்லாரும் ஆரோக்கியமாக உள்ளார்கள். கோவிட் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ’’ என்றார்.

இன்று வரை உலகம் முழுவதும் 617,181,942 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,530,727 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 596,836,005 பேர் மீண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 13,815,210  பேருக்கு கொரானா ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,536,468 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 528,337 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 43,957,929 ஆகும்…

Next Post

போலீசார் கண் முன்னே தீக்குளித்த கொடூரம்.... நிலத் தகராறில் நடந்த பகீர் சம்பவம்..!

Mon Sep 19 , 2022
மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டம் சிம்ரொல் நகரில் வசித்து வருபவர் பன்வர் சிங் (45). இவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே சிம்ரொல் நகரில் நிலப்பிரச்சினை இருந்தது. பன்வர்சிங் தனது ஆதரவாளர்களிடன் நேற்று பிரச்சினைக்குரிய நிலப்பகுதிக்கு சென்றார், அங்கு எதிர் தரப்பும் திரண்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது, அவ்வழியாக வந்த ரோந்து வந்த காவல்துறையினர் மோதலை தடுக்க இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது, பன்வர் சிங் […]

You May Like