கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!! இவர்கள் கட்டாயம் முக்கவகசம் அணிய உத்தரவு..!!

Corona 205

நாட்டில் தற்போது கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.


அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவில் கொரோனா பாதித்து 1,679 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 5,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வேண்டும் என்றும் கைகளை கிருமி நாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவசியம் இன்றி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இம்மாதிரியான சூழலில் கர்ப்பிணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் இருமல், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதைக்கு தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாஜக..? இன்று அமித்ஷாவை சந்திக்கிறார் விஜய்..? திமுகவை வீழ்த்த இதுதான் வழி..!! பரபரப்பில் தமிழகம்..!!

CHELLA

Next Post

மாணவர்களுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

Sat Jun 7 , 2025
மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பது […]
School Money 2025

You May Like