தமிழக்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து வாரந்தோறும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது.
பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அக்டோபர் மாதத்தில் இருந்து வாரம் தோறும் புதன் கிழமைகளில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் , ’’ அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவே மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், அரசு மருத்துவமனைகளில் , அங்கன்வாடி மையங்களில் , சத்துணவு மையங்களில் , பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என ஐம்பதாயிரம் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது . அடுத்தக்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளியே தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. இதற்கான முகாம் வாரம்தோறும் புதன் கிழமை நடைபெறும். அக்டோபர் மாதம் முதல் வாரம் புதன்கிழமைகளில் இந்த முகாம் தொடங்குகின்றது. என்றார். ..
இதனிடையே ’’புளூ’’ காய்ச்சல் பள்ளிக்குழந்தைகளிடையே பரவுவது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் , ’’ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இல்லை. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகும். புளூ காய்ச்சல் விவகாரத்தில் மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளது. இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. ’’ என்றார்.