அழகுக்கு மட்டுமல்ல; வெயிலுக்கு ஏற்ற காட்டன் புடவைகள்!. நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!.

cotton sarees 11zon

பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்


இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதாவது பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது. கோடையினால் நம் உடலில் வெளியேரும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது. பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும். கிட்டத்தட்ட ஆட்டோமேட்டிக் டவலைப் போல் செயல்படுகிறது. இதனால் உடலின் களைப்பும் தெரிவதில்லை

அடுத்ததாக சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போன்றும் செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமலும் செய்கிறது. இதனால் வெப்பத்தை வெளியேற்ற உள்ளே இழுக்கச் செய்கிறது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் குறைகிறது. இது இலகுவான தன்மையைப் பெற்றதால் அனைத்து விதமான உடல் அமைப்பு பெற்றவற்களுக்கும் இவ்வாடைகள் பொருந்தி விடுகின்றன.

காட்டன் புடவையோட மென்மை. இந்தத் துணி ரொம்பவும் இலகுவா இருக்கும். அதனால நீங்க நாள் முழுக்க கட்டியிருந்தாலும் உங்களுக்கு பாரமா இருக்காது. அதுமட்டுமில்லாம, காட்டன் துணி ரொம்ப சாஃப்டாவும் இருக்கும். அதனால உங்க தோலுக்கு எந்தவிதமான எரிச்சலும் உண்டாகாது. வெயில்ல சூடாகிப்போன தோலுக்கு இது ஒரு இதமான உணர்வை கொடுக்கும்.

காட்டன் புடவை சருமத்துக்கு ரொம்ப நல்லது. சில பேருக்கு செயற்கை துணிகள் அலர்ஜியை உண்டாக்கும். ஆனா காட்டன் இயற்கையானதுனால அந்த மாதிரி எந்த பிரச்சனையும் வராது. அதனால சென்சிட்டிவ் ஸ்கின் இருக்கிறவங்க கூட தைரியமா காட்டன் புடவை கட்டலாம். வெயில் காலத்துல ஏற்படுற தோல் அரிப்பு, வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் வராம இருக்கவும் இது உதவும்.

காட்டன் புடவை எல்லா விதமான சூழ்நிலைகளுக்கும் ஏத்த மாதிரி இருக்கும். நீங்க வீட்டுல சும்மா இருக்கீங்களா இல்ல ஒரு ஃபங்ஷனுக்கு போறீங்களா, காட்டன் புடவை எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும். அதுமட்டுமில்லாம, இதுல நிறைய டிசைன்களும் கலர்ஸும் கிடைக்குது. அதனால உங்களோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி நீங்க தேர்ந்தெடுத்துக்கலாம்.

Readmore: தாய்மார்களே!. குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்காதீர்கள்!. இத்தனை பக்க விளைவுகளா?. கவனமா இருங்க!

KOKILA

Next Post

அதிரடி...! தகவலின்றி மாணவர்கள் லீவ் எடுத்தால், பெற்றோர் பள்ளிக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்...!

Thu Jun 5 , 2025
சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும். மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. கைப்பகுதி முழங்கை அளவுக்கு […]
School 2025 3

You May Like