பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்.?

இலங்கையின் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா, என்பவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் பாதிலேயே குணதிலகா விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக இலங்கை அணியில் அஷேன் பண்டாரா என்பவர் அணியில் சேர்க்கப்பட்டார்.


காயம் ஏற்பட்ட போதிலும் அவர் இலங்கைக்கு திரும்ப செல்லாமல் தனது அணியுடனேயே இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் நேற்று தினத்தில் சிட்னியில் நிகழ்ந்த ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் போட்டிக்கு பின்னர் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசார் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இவர் 2018ஆம் வருடம் இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததாக குணதிலகா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் தனுஷ்கா குணதிலகா மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து இலங்கையில் நோர்வே பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு அவரது நண்பரிடம் விசாரணை நடத்தியதில் குணதிலகாவுக்கு இதில் எந்த சம்பந்தமில்லை என்று விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து அவரை விடுவித்தனர்.

1newsnationuser5

Next Post

பால் விலை உயர்வு எதிரொலி..!! டீ, காஃபி விலை அதிரடி உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Sun Nov 6 , 2022
தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ள நிலையில், டீ – காஃபி விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என […]

You May Like