இளைஞர்களின் வங்கிக் கணக்கில் திடீரென டெபாசிட் ஆன கோடிக்கணக்கான பணம்..!! அதிர்ச்சியில் வங்கி நிர்வாகம்..!!

இளைஞர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் வங்கிக் கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். அதோடு ஐஃபோன் வாங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், மற்ற வங்கிகளில் கணக்கு திறந்து பணத்தை டெபாசிட் செய்தல் என பல வழிகளில் பணத்தை செலவு செய்து வந்துள்ளனர்.

இளைஞர்களின் வங்கிக் கணக்கில் திடீரென டெபாசிட் ஆன கோடிக்கணக்கான பணம்..!! அதிர்ச்சியில் வங்கி நிர்வாகம்..!!

இந்நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனதை தெரிந்து கொண்ட வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நிதின் மற்றும் மனு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும், இளைஞர்கள் இருவரும் 2 கோடியே 44 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளது விசாரணையில் அம்பலமானது. இதற்கிடையே, இருவரும் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

CHELLA

Next Post

இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை..!! அதிரவைத்த அறுவை சிகிச்சை..!! ஷாக்கில் மருத்துவர்கள்..!!

Sun Dec 25 , 2022
இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை போன்ற பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜார்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் 22 வயது இளைஞர் ஒருவர், கடும் வயிற்று வலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, இளைஞருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு அல்ட்ரா சவுண்ட் பலமுறை செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, […]
Hospital

You May Like