கடலூரில் கொடூரம்…! ஜாமினில் வெளிவந்த கொலை குற்றவாளி படுகொலை….!

கடலூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த எலி என்ற கிருஷ்ணமூர்த்தி இந்த நிலையில், ஜோசப்( 18) என்ற இளைஞருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண்ணுடன் பேசி பழகுவது குறித்து இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுடன் பேசிய வீடியோவை டிக் டாக்கில் பதிவிடுவது குறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 4ம் தேதி ஜோசப் வீட்டை விட்டு வெளியே சென்று அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பவே இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இது குறித்து ஜோசப்பின் தாயார் வழங்கிய புகாரின் அடிப்படையில் கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அவருடைய செல்போனில் கடைசியாக பேசிய விஜய், பிரபாகரன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் விசாரணையில், ஜோசப்பை கழுத்தை அறுத்து கொலை செய்து காரைக்காடு பகுதியில் உள்ள உப்பனாற்றில் அவருடைய சடலத்தை புதைத்ததாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த தகவலின் அடிப்படையில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஜோசப்பின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடைய நண்பரான விஜயிடம் விசாரணை நடைபெற்றபோது இந்த உண்மை அனைத்தும் தெரிய வந்திருக்கிறது ஆகவே இந்த மோதல் காரணமாக ஜோசப்பின் கொலை நடைபெற்றுள்ளது என்பது தெளிவானது.

மேலும் இந்த கொலையில் தொடர்புள்ள 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 7வது குற்றவாளியான எலி என்ற கிருஷ்ணமூர்த்தி(28) இவர் கடலூர் பகுதியில் இருக்கின்ற சிப்காட் அருகே ஈச்சங்காடு கிராமத்தைச் சார்ந்தவர், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் தான் கிருஷ்ணமூர்த்தி நேற்று அவருடைய வீட்டின் அருகில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரித்த காவல்துறையினர் ஜோசப் கொலையில் இருந்த முன் விரோதம் காரணமாக, இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

சொந்த மனைவி மற்றும் குழந்தையை 21 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவல்துறை அதிகாரி…! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை….!

Wed Jan 11 , 2023
நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருந்தாலும் கூட, நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க முடியாது என்பதன் அடிப்படையில் குற்றங்களை கண்காணிப்பதற்கு காவல் துறையை நியமனம் செய்தது. இந்த காவல்துறையின் வேலை குற்றங்களை கண்காணிப்பதும், குற்றங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதும் தான். ஆனால் இந்த காவல்துறையில் இருக்கும் அதிகாரிகளே ஒரு சில சமயங்களில் குற்றங்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் […]
murder pti 1549362654 0 1 1563085539

You May Like