விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி கொடுத்தார். நிகழ்ச்சி குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அவர் வெளியேறினாரா என குழப்பமும் நிலவியது. இருப்பினும் மணிமேகலை தான் வெளியேறியதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை. அவர் கிராமத்தில் வாங்கி இருக்கும் நிலத்தில் ஒரு பெரிய ஃபார்ம் ஹவுஸ் கட்ட போவதாக அறிவித்து அதன் பூஜை புகைப்பங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்நிலையில், குக் வித் கோமாலி ஷோவில் நடுவராக இருந்து வரும் தாமு அளித்த பேட்டியில் “மணிமேகலை எனக்கு மகள் போன்றவர். அவர் ஷோவை விட்டு போனது எங்களுக்கு இழப்பு தான். அவரது காமெடியை அதிகம் நான் மிஸ் செய்கிறேன். இது அவரது விருப்பம். அடுத்து anchor போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதனால் எடுத்த முடிவு தான் இது” என கூறியிருக்கிறார்.