புயல் எச்சரிக்கை!… அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!… வானிலை மையம் அலர்ட்!

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஜூன் 7-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று முதல் ஜூன் 7ம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகலாம் என்றும் குறிப்பாக, அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மும்பை மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட மகாராஷ்டிராவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என்று பெயர் வைக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

உடல் ஆரோக்கியமாகவும், முகம் பளபளப்பாக வேண்டுமா?... அப்போ ஒருசொட்டு தேனை தொப்புளில் தடவுங்கள்!

Mon Jun 5 , 2023
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தேனை விரும்பி உண்டு. அந்த வகையில், தேன் என்பது பூக்களின் அமிர்தத்திலிருந்து தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான இனிப்புப் பொருள். தேனில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நமது உடலுக்கு பல்வேறு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலர் தங்கள் சருமத்தை பராமரிக்க தவறிவிடுகின்றனர். இந்த விஷியத்தில் தேன் உங்களுக்கு உதவும். இதற்கு தினமும் தொப்புளில் […]

You May Like