Flash: 3 மணி நேரத்தில் உருவாகிறது டிட்வா புயல்..! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..

Montha Cyclone

வங்க கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு வங்ககடலில் இலங்கையை ஓட்டிய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுவடைந்து புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும், ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ (Titva) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. டிட்வா புயல் உருவாகி 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும்.

புயல் உருவாகி தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிட்வா புயல் உருவாக உள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more: தங்கம் விலை இனி குறையாது.. 2026-ல் ரூ.1.5 லட்சத்தை தாண்டும்.. அமெரிக்க வங்கி கணிப்பு..!

English Summary

Cyclone Titva to form in 3 hours..! Meteorological Department issues alert..

Next Post

“ மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்..” உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

Thu Nov 27 , 2025
தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. உதயநிதி பிறந்தநாளை திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன.. உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அன்னதானம் வழங்கி திமுக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அரசியல் பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் […]
udhayanidhi stalin

You May Like