பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வந்தவர் வித்யா ராம். இவரது மனைவி பூனம் சர்மா. இவர்களுக்கு இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு சிறுமியும், 16 வயதில் ஒரு சிறுமியும் உள்ளனர். வித்யா ராம் – பூனம் சர்மா இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இந்த தகராறு உச்சத்திற்கு சென்றுள்ளது. அடுப்பில் இருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து மனைவியை கடுமையாக தாக்கி இருக்கிறார் வித்யா ராம்.
அப்போது பெற்ற தாய்க்கு ஆதரவாக நின்று இருக்கிறார்கள் மகள்கள். இதனால் ஆத்திரமடைந்த வித்யாராம், பெட்ரோலை எடுத்து வந்து மகள்கள் மீது ஊற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி மகள்கள் இரண்டு பேரும் அலறி துடித்துள்ளனர். இவர்களின் அலறம் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து படுகாயம் அடைந்த சிறுமிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தகவல் அறிந்த போலீசார், கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வித்யா ராமை கைது செய்தனர்.