’அப்பா வேண்டாம் வலிக்குது’..!! பெற்ற மகள்களை துடிதுடிக்க வைத்த கொடூர தந்தை..!! பகீர் சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வந்தவர் வித்யா ராம். இவரது மனைவி பூனம் சர்மா. இவர்களுக்கு இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு சிறுமியும், 16 வயதில் ஒரு சிறுமியும் உள்ளனர். வித்யா ராம் – பூனம் சர்மா இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இந்த தகராறு உச்சத்திற்கு சென்றுள்ளது. அடுப்பில் இருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து மனைவியை கடுமையாக தாக்கி இருக்கிறார் வித்யா ராம்.


அப்போது பெற்ற தாய்க்கு ஆதரவாக நின்று இருக்கிறார்கள் மகள்கள். இதனால் ஆத்திரமடைந்த வித்யாராம், பெட்ரோலை எடுத்து வந்து மகள்கள் மீது ஊற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி மகள்கள் இரண்டு பேரும் அலறி துடித்துள்ளனர். இவர்களின் அலறம் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து படுகாயம் அடைந்த சிறுமிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தகவல் அறிந்த போலீசார், கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வித்யா ராமை கைது செய்தனர்.

CHELLA

Next Post

’டாக்டர் தொடும்போது மட்டும் உனக்கு வலிக்கலையா’..? மனைவியை அடித்து 2 மாத குழந்தையை கொன்ற கொடூரம்..!!

Fri Mar 31 , 2023
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கவுசல்யா என்பவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பே இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால், கவுசல்யா கர்ப்பமானார். இதனால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, ரஞ்சித்குமார், தனது மனைவி கவுசல்யா மற்றும் குழந்தையை […]
baby 1178539 1920

You May Like