கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஒரு ஆண் சடலம் எரிந்த நிலையில், கிடந்தது. இதை பார்த்து பதறிப்போன பொதுமக்கள், அலறியடித்து கொண்டு, உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த நபர் யார் என்ற அடையாளமும் தெரிந்தது. அவர் பெயர் பிரகாஷ் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (36).
இதையடுத்து, போலீசார் லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் ஆரம்பத்தில் இருந்தே போலீசாருக்கு லட்சுமி மீது சந்தேகம் கிளம்பியது. பிறகுதான் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் மழுப்பலான பதிலை சொன்னவர், பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார். இது ஒரு கள்ளக்காதல் கொலை என்பது அம்பலமானது. லட்சுமியின் கள்ளக்காதலன் பெயர் சின்னராஜ். இவருடைய உதவியுடன்தான் கணவனை லட்சுமி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி அளித்த வாக்குமூலத்தில், ”என்னுடைய கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது தினமும் குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்வார்.. தினமும் பாலியல் தொல்லையும் கொடுப்பார்.. அப்படித்தான், கடந்த மார்ச் 18ஆம் தேதியும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன் அதில் அவர் இறந்துவிட்டார்.. இதையடுத்து, சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தேன்.
அதனால், கள்ளக்காதலன் சின்ன ராஜுக்கு போன் செய்தேன். சின்ன ராஜ் சரக்கு வேன் டிரைவர். அவருடன் எனக்கு ஸ்கூல் படிக்கும்போதிருந்தே காதல் இருந்தது.. திருமணமான பிறகும் கூட, கள்ளக்காதல் தொடர்ந்தது.. நான் போன் செய்து அழைத்ததுமே, சின்னராஜ் வீட்டிற்கு வந்தார். பிறகு, என்னுடைய கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்றோம். ஆள் நடமாட்டம் இல்லை என்பதை தெரிந்துகொண்டு, அங்கு உடலுக்கு தீ வைத்து எரித்து விட்டு வந்து விட்டோம். உடலை எரித்ததால் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும், விசாரணை நடத்தி எங்களை கைது செய்தார்கள்” என்றார்.
காட்டுக்குள் கணவனை எரித்துவிட்டு, கணவனை காணோம் என்று பெயரளவுக்கு ஒரு புகாரையும் போலீசில் லட்சுமி தந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.. கணவன் வீட்டில் இல்லாத சமயங்களில் சின்னராஜ் வந்துபோயுள்ளார்.. கணவன் வீட்டில் இருந்த சமயங்களில் எல்லாம், போனில் பேசிக் கொண்டே இருப்பார்களாம்.. கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துள்ளது.. அதேசமயம், பாலியல் டார்ச்சர் தந்ததால்தான், கொலையை செய்ததாக, லட்சுமி பலமுறை தெரிவித்துள்ளார்.. இப்போது கள்ளக்காதலர்கள் இருவருமே ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.