அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. அரசு மருத்துவமனையில் தனி படுக்கைகள் தயார்…!

Dengue 2025

டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு பாதிப்பும் மேலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கு தலா 10 படுக்கைகளுடன் தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. அதேபோல, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 14 படுக்கைகள், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.


அறிகுறிகள்

டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள். திடீர் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி மற்றும் சொறி போன்றவை ஆகும். சில நேரங்களில், இது தீவிரமான டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலாக மாறக்கூடும், எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

இது இரண்டு வடிவங்களில் நிகழ்கிறது:

டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் (DHF) : டெங்கு காய்ச்சல் என்பது ஒரு காய்ச்சல் போன்ற நோயாகும். டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் (DHF) என்பது மிகவும் கடுமையான நோயாகும், இது மரணத்தை ஏற்படுத்தக்கூடும். டெங்கு காய்ச்சல் அல்லது DHF இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் அருகிலுள்ள மருத்துவ வசதிக்குச் செல்ல வேண்டும்.

டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள்கடுமையான தொடர்ச்சியான வயிற்று வலிகள்தோல் வெளிர் நிறமாக, குளிர்ச்சியாக அல்லது ஈரமாக மாறும். மூக்கு, வாய் மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு மற்றும் தோல் வெடிப்புகள்இரத்தத்துடன் அல்லது இல்லாமல் அடிக்கடி வாந்தி. தூக்கம் மற்றும் அமைதியின்மை நோயாளிக்கு தாகம் ஏற்படுகிறது, வாய் வறண்டு போகிறது. விரைவான பலவீனமான நாடித்துடிப்புசுவாசிப்பதில் சிரமம்.

Vignesh

Next Post

உலகிலேயே மிகப்பெரிய சனீஸ்வரர் கோயில் தமிழ்நாட்ல தான் இருக்கு..!! இங்கு வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

Mon Oct 13 , 2025
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் பெருமையை விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சனீஸ்வரன் கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் சிலை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆன்மீகப் பெருமை மட்டுமன்றி, பிரம்மாண்டமான கட்டிடக் கலையாலும் இந்தக் கோவில் பக்தர்களைத் தன்வசம் ஈர்க்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மகா கும்பகோபுரமும், 54 அடி […]
God 2025

You May Like