தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது 3 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, தத்தெடுக்கும் தாய்மார்கள் 12 வார மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது ஏற்படையது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், தத்தெடுக்கும் தாய் 12 வார மகப்பேறு விடுப்புக்கு உரிமையுடையவராக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. “2020 ஆம் ஆண்டின் சட்டத்தின் பிரிவு 60(4), தத்தெடுக்கும் தாய் மகப்பேறு பலனைப் பெறுவதற்கு, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயதிற்கு மூன்று மாதங்கள் என்ற வரம்பை விதிப்பதால், அது அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆம் சரத்துகளை மீறுவதாக உள்ளது,” என்று அந்த அமர்வு கூறியது.
மகப்பேறு பலன்களின் நோக்கம் தாய்மையுடன் உள்ளார்ந்த முறையில் பிணைக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. “இந்தச் சூழலில், மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கும் தாய்மார்கள், இளங்குழந்தைகளைத் தத்தெடுப்பவர்களைப் போன்றே ஒரே நிலையில் உள்ளனர். ஏனெனில், இருவருக்கும் குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்தவும், பராமரிக்கவும், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் நேரம் தேவைப்படுகிறது,” என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், “குழந்தையின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சலுகைகளை மறுப்பது, ஒரு செயற்கையான மற்றும் நியாயமற்ற வகைப்பாட்டை உருவாக்குகிறது.. குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், தத்தெடுப்புடன் வரும் குறிப்பிடத்தக்க உணர்ச்சிபூர்வமான, உளவியல் ரீதியான மற்றும் நடைமுறை ரீதியான மாற்றங்களை இந்தச் சட்டப்பிரிவு கணக்கில் கொள்ளத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது.
தந்தைவழிப் பேறுகால விடுப்பை ஒரு சமூகப் பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் ஒரு சட்டப்பிரிவைக் கொண்டுவருமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.
3 மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்க்கு மட்டுமே 12 வார மகப்பேறு விடுப்பை அனுமதிக்கும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4)-ஐ எதிர்த்து வழக்கறிஞர் ஹம்சானந்தினி நந்தூரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது..
Read More : EPFO ஓய்வூதியம் விரைவில் ரூ.7,500-ஆக உயர்த்தப்படுமா..? மத்திய அரசு தெளிவான விளக்கம்..!



