கோழி வந்ததா? முட்டை வந்ததா? ஏன் இந்த ஆராய்ச்சி …  சரத்குமார் பதிலடி…

கோழி வந்ததா முட்டை வந்ததா என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

 ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை வலுத்து வருகிறது.   ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர வலுத்து வருகிறது.   இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார்  மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா அல்லது குரங்கு இப்போது மனிதன் என சொல்வோமா?  இந்த சர்ச்சைகளை எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா? என அவர் கேட்டுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்புவோம் உலகறியச் செய்வோம் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில்,   மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா சைவமா வைணவமா?  சைவம் இந்து மதமா பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.   சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கிபி எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாத்தம், கௌமாரம் சௌரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம்  என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம் ,சமணம் ,பௌத்தம், சீக்கியம், மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் வரையறுத்துள்ளது. 

ponniyinselvan

 1790 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது கிறிஸ்தவம் , இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து சிந்து நதியிலிருந்து மருவிய இந்து என்ற பெயரிடப்பட்டது.

 குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்.  மனித குரங்கு எதிலிருந்து வந்தது?  குரங்கு விலங்கு என்றால் விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்?  மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா அல்லது குரங்கு இப்போது மனிதன் என சொல்வோமா?  இந்த சர்ச்சைகளை எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா? என்று கேட்கிறார்.

அவர் மேலும்,  கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா? தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம்.  ஆனால் இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்? 

 கோழி வந்ததா முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்?  யார் முதலில் வந்தார்கள் எது முதலில் வந்தது என்பதை வைத்து பின்னால் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரை அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?  காலத்திற்கு ஏற்ப ஆட்சி அமைப்பு ஒருங்கிணைப்பு வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது.  

அப்போது ஹோமோ சேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா? சைவ சமயம் இருந்தது உண்மை.  வைணவ சமயம் இருந்தது உண்மை.  அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.  இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாகக் கொண்டது .  அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்கு உரியது

Next Post

முதல் சூரிய சக்தி கிராமம் தொடக்கம் …. குஜராத்தில் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி ….

Sun Oct 9 , 2022
குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதல் சூரிய சக்தி கிராமத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மெக்சானா மாவட்டத்தில் மெதேரா என்ற கிராமம் உள்ளது. 1026-27ல் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னரால் புகழ்பெற்ற சூரிய கோயில் கட்டப்பட்டது. இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனர்கள் இலவசமாக தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க மோடியின் தொலைநோக்குப் பார்வையின் […]
solar power

You May Like