டைனோசர்களின் அழிவுக்கு ராட்சத விண்கல் தான் காரணமா..? புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்கியதால் தான் டைனோசர்கள் அழிந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் அது முழு உண்மையா? நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (பிஎன்ஏஎஸ்) இதழில் வெளியிடப்பட்ட இந்த சமீபத்திய ஆய்வு நீண்டகாலமாக நம்பப்படும் விண்கல் கோட்பாட்டிற்கு முரணானது! ஆம்.. பூமியை அந்த விண்கல் தாக்கிய அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு முன்பே டைனோசர்கள் அழியத் தொடங்கிவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. டைனோசர்களின் எண்ணிக்கையும் பன்முகத்தன்மையும் ஏற்கனவே குறைந்து வருவதாக சீனாவின் புதைபடிவ முட்டைகள் தெரிவிக்கின்றன என்று அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

dinosaur mn

மத்திய சீனாவின் ஷான்யாங் படுகையில் 150-மீ தடிமன் கொண்ட தொடர்ச்சியான புதைபடிவங்கள் நிறைந்த வரிசையிலிருந்து 1,000 டைனோசர் முட்டை ஓடு மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர், இது மிகவும் அதிகமான டைனோசர் வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாகும். ஆராய்ச்சியாளர்கள் 5,500 க்கும் மேற்பட்ட ராக் மாதிரிகளை துல்லியமாக தேதியிட கணினி மாடலிங் மூலம் பகுப்பாய்வு செய்துள்ளனர்.

அதில் விண்கல் பூமியை தாக்கியதற்கு முன்பே டைனோசர் பன்முகத்தன்மை குறைந்து வருவதை ஆய்வு வெளிப்படுத்தியது.. 66.4 மற்றும் 68.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதே சகாப்தத்தில் பெரிய உடல், நீண்ட கழுத்து டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் புதைபடிவங்கள் காட்டுகின்றன. எனவே, உலகளாவிய காலநிலை மாற்றங்கள், மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளின் விளைவாக சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்திருக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.. சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்ட பேரழிவுக்குரிய நிகழ்வுகள் அல்லாத டைனோசர் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது..

ஆனால் இதற்கு முன்பு வரை ராட்சத விண்கல் பூமியை தாக்கியதால் டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறிவந்தனர். ராட்சத விண்கல் தாக்குதல் 10 பில்லியன் அணுகுண்டுகளுக்கு சமமான ஆற்றலை வெளியிட்டது… இதன் தாக்கம் பல தசாப்தங்களாக நீடித்தது என்றும் பறவை அல்லாத அனைத்து டைனோசர்களும் வெடிப்பு அல்லது அமில மழையால் கொல்லப்பட்டன என்றும் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

1newsnationuser1

Next Post

சிபிசிஐடி வசம் செல்கிறதா பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு..? அரசு அதிரடி முடிவு..!

Tue Sep 27 , 2022
தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் 6 இடங்களிலும், பொள்ளாச்சியில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 2 இடங்களிலும், இராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டம், தாம்பரம், கடலூர், மேட்டுப்பாளையம், மதுரை உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர்கள் பாஜக மற்றும் இந்து முன்ணணி ஆகியோர் வீடுகள் […]
சிபிசிஐடி வசம் செல்கிறதா பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு..? அரசு அதிரடி முடிவு..!

You May Like