பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்கவில்லையா…? உடனே இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள்…! சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அதிரடி…!

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் கட்டணமில்லா தொலைபேசி என்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் உரிய பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்றும் இதனால் பள்ளிக்கு செல்வோர், அலுவலகம் செல்வோர் என பல பாதிப்பு அடைந்து வந்ததாக மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் கட்டணமில்லா தொலைபேசி என்னை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மாநகர பேருந்துகள் உரிய பேருந்து நிறுத்தத்தில் நிற்காவிடில் பொதுமக்கள் 149 என்ற கட்டணமில்லா என்னை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, வழித்தட எண், பக்கவாட்டு எண்(எ.கா. ADX 0000), அல்லது பதிவு எண்(எ.கா. TN 01 XX 0000), பேருந்து எங்கிருந்து எங்கு செல்கிறது, நேரம் மற்றும் நிறுத்தாமல் சென்ற பேருந்து நிலையத்தின் பெயர் உள்ளட்டவை குறிப்பிட்டு புகார் தெரிவிக்கலாம்.

Kathir

Next Post

PM Modi | "மக்களின் சொத்துக்களை அபகரிக்கவே காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது…" பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

Fri Apr 26 , 2024
PM Modi: 18-வது பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 12 தொகுதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. […]

You May Like