’லியோ’ திரைப்படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் சொன்ன அந்த வார்த்தை..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். வித்தியாசமான கதைகங்களை தேர்வு செய்து இயக்கி அதன் மூலம் வெற்றி இயக்குநர் என்ற அடையாளத்தையும் பெற்றவர். இயக்கத்தை தாண்டி, ஒரு சிறந்த நடிகராகவும் பார்க்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக காஷ்மீர் சென்றிருந்த இயக்குநர் மிஷ்கின், படத்தில் தான் நடித்த அனுபவங்களை பற்றியும், படக்குழுவினர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை பற்றியும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Vijay 1

அந்த பதிவில் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்… minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார். என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான். அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் நிச்சசயம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று அண்ட் பதிவில் கூறியுள்ளார். இந்த ஆண்டு மே மாதத்துக்குள் லியோ படத்தின் மொத்த ஷூட்டிங் நிறைவு பெரும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

’கிரிக்கெட் போட்டியால் இப்படி ஒரு பிரச்சனை வரும்னு தெரியாது’..!! குடிபோதையில் இளைஞர்கள் செய்த காரியம்..!!

Mon Feb 27 , 2023
கும்மிடிப்பூண்டி அருகே கிரிக்கெட் போட்டியால் 2 கிராமங்கள் இடையே மோதல் வெடித்த நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பக்கத்து கிராமமான சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த விவகாரம் பெரிதானதால், இரவில் இருதரப்பும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமானது. இந்த […]
WhatsApp Image 2023 02 27 at 2.32.49 PM

You May Like