கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி..? தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!!

Gold Loan 2025

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தங்கத்தை அவசர தேவைகளுக்கான முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் குறையவில்லை. தேவைப்படும்போது உடனடியாகப் பணமாக மாற்ற முடியும் என்பதாலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதாலும், தங்க நகைக்கடனுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது.


இந்தக் கடன் நடைமுறையில் ஆவணங்களோ, அதிக சிக்கல்களோ இல்லை என்பதால், சாமானியர்கள் தங்க நகைக்கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். தேசிய வங்கிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றிலும் நகைக்கடன் வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள திமுக அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி பொங்கலுக்கு 5000 பரிசாக கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல்  விரைவில் தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ரூ.6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு? என்பது குறித்த பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: 15 பேர் பலி; பாய்லர் வெடித்து பயங்கர விபத்து.. பாகிஸ்தானில் சோகம்..!

English Summary

Discount on jewelry loans in cooperative banks..? Good news for the people of Tamil Nadu..!!

Next Post

Breaking : கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு அரசியல் கட்சிகளே முழு பொறுப்பு.. இதை எல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணணும்.. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்..

Fri Nov 21 , 2025
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோவில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே முழு பொறுப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. 5000 பேருக்கு மேலும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், […]
9720893 chennaihighcourt25020002

You May Like