வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! இரவு 8 மணிக்கு மேல் தடை…! ஆட்சியர் அறிவிப்பு…! முழு விவரம்…

புத்தாண்டை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ வனப்பகுதியை ஒட்டி பல தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ , கேளிக்கை விடுதிகள்‌ அமைந்துள்ளன.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைத்து தங்கும்‌ விடுதிகளும்‌ ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இது போன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து தங்கும்‌ விடுதிகள்‌, ரிசார்டுகள்‌, கேளிக்கை விடுதிகளுக்கும்‌ புத்தாண்டினை ஒட்டி கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ , கேளிக்கை விடுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிக ஒலி எழுப்பும்‌ ஒலிபெருக்கிகள்‌ பயன்படுத்தக்கூடாது.

பொது இடங்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட தடை..!! வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள்..!! காவல்துறை எச்சரிக்கை

வணப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ , கேளிக்கை விடுதிகளில்‌ பட்டாசுகள்‌, வெடிகள்‌ மற்றும்‌ வானவேடிக்கைகள்‌ வெடிக்கக்கூடாது.வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும்‌ விடுதிகள்‌, ரிசார்டுகள்‌, கேளிக்கை விடுதிகளில்‌ அதிக அளவில்‌ கூட்டம்‌ சேர்த்து வாகன நெரிசல்‌ ஏற்படுத்தி அருகிலுள்ள வனம்‌ மற்றும்‌ வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது.

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ / கேளிக்கை விடுதிகளில்‌ அதிக ஒளி உமிழும்‌ விளக்குகளை உபயோகிக்க கூடாது. வனப்பகுதிக்கு தீ ஆபத்து விளைவிக்கும்‌ எந்தவொரு செயலிலும்‌ ஈடுபடக்கூடாது. மது அருந்திவிட்டு நள்ளிரவில்‌ வனச்சாலைகளில்‌, வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில்‌ வாகனத்தில்‌ வரக்கூடாது.

மது அருந்திவிட்டு, நள்ளிரவில்‌ விருந்தினர்கள்‌ வாகனம்‌ ஓட்டி செல்வதை அவ்வழியாக செல்லும்‌ வன விலங்களுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு ஏற்படக்கூடும்‌ என்ற வகையில்‌ அதை கண்காணிப்பது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும்‌ விடுதி, ரிசார்டுகள்‌ / கேளிக்கை விடுதியாளர்களின்‌ பொறுப்பாகும்‌.

விடுதிக்கு அருகில்‌ யானை, மான்‌, காட்டுமாடு போன்ற வன விலங்குகள்‌ தென்பட்டால்‌, சொந்த முயற்சியில்‌ விரட்ட முயற்சிக்காமல்‌ வனத்துறைக்கு தகவல்‌ தெரிவிக்க வேண்டியது அவசியம். வனச்சாலையை பயன்படுத்துவதாக இருந்தால்‌, இரவு 8 மணிக்கு மேல்‌ புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தக்கூடாது.

Vignesh

Next Post

மக்களே கவனம்: செங்கல்பட்டில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!...

Sat Dec 31 , 2022
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 […]
Job

You May Like