fbpx

4000 உதவிப் பேராசிரியர்கள் : விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட நிலையில் எழுத்து தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்க மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டி.இ.டி. தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.

அதனை தொடர்ந்து டி.இ.டி. முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக TET இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 4000 துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். இதில் 5,408 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Next Post

திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா? இனி இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

Wed Nov 9 , 2022
திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம்படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ளது. கடலோரத்தில் வீற்றிருக்கும் செந்தில்நாதனை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் புனித தன்மையை காக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் இனி பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. வழக்கு ஒன்றை விசாரித்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை […]

You May Like