fbpx

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை..!! முன்னுதாரணமாக திகழ்ந்த மருத்துவர்..!! குவியும் பாராட்டு..!!

ஆத்தூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் பெண்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பிணிகள் அதிகமாக தனியார் மருத்துவமனையே நாடி செல்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும், அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆத்தூர் அருகே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை..!! முன்னுதாரணமாக திகழ்ந்த மருத்துவர்..!! குவியும் பாராட்டு..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா (31). இவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த மருத்துவர் புகழ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருந்த ஹர்ஷிதா தான் பணியாற்றும் மருத்துவமனையிலேயே தொடர்ந்து பரிசோதனை சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், தான் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 21ஆம் தேதி சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Chella

Next Post

’இதற்கு எங்கள் தலையை துண்டித்துவிடலாம்’..!! ’விலங்குகளை விட மோசமாக நடத்துகிறார்கள்’..!! அலறும் ஆப்கானிய பெண்..!!

Mon Dec 26 , 2022
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது முழு அடக்குமுறையை ஏவும் விதமாக தாலிபான்கள் அரசாங்கம், கல்வி உரிமையை பறித்திருக்கும் செயல் உலக நாடுகள் மத்தியில் பெரும் விவாதத்தையே உண்டாக்கியிருக்கிறது. உலகளவில் பெண்கள் எல்லா துறைகளிலும் தங்களை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆப்கானிய பெண்களின் கல்வியை மட்டும் பறிப்பது எந்தளவுக்கு உசிதமானதாக இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், தன் குடும்பத்திலிருந்து முதல் பெண்ணாக பல்கலைக்கழகம் சென்று படிக்க இருந்த […]
’இதற்கு எங்கள் தலையை துண்டித்துவிடலாம்’..!! ’விலங்குகளை விட மோசமாக நடத்துகிறார்கள்’..!! அலறும் ஆப்கானிய பெண்..!!

You May Like