fbpx

சென்னையில் தீவிரவாதிகள் விட்டுச் சென்ற பை?

சென்னையில் வாகன சோதனையில் இளைஞர்கள் விட்டுச் சென்ற பையை சோதனை செய்தபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 3 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது நிற்கவில்லை. போலீசார் துரத்திச் சென்றபோது பை மட்டும் கிடைத்துள்ளது. அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பினர். அந்த பையை சோதனை செய்தபோது அவர்களில் ஒருவர் நாகூர் மீரான் என்பது தெரியவந்தது.

நாகூர் மீரான் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் வெடிகுண்டு தயாரிக்கதேவையான குறிப்புகள் இருந்தது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ். பயங்கர வாத அமைப்புகளுடன் தொடர்புடையது என்பதையும் போலீசார் பையை சோதனை செய்து தெரிந்து கொண்டனர்.

இதனால் சென்னையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்குமோ என்ற பீதி எழுந்துள்ளது. இதையடுத்து காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தி நாகூர் மீரானை பிடித்தனர். அவருடைய நண்பர்கள் இரண்டு பேரும் ஜாகீர், நவாஸ் ஆவார். அவர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் யார்? உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு உள்ளதா? எதற்காக வந்துள்ளார்கள் என்பதுஉள்பட பல தகவல்கள் போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும் என தகவல்கள் வந்துள்ளன.

Next Post

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம்… மாப்பிள்ளை இவர்தானாம்…

Sat Nov 12 , 2022
விஜய்டிவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ராஜா ராணி முதல் பாகத்தில் அறிமுகமானவர் ரித்திகா. அந்த நாடகத்திற்கு பின்னர்இவர் வேறு எந்த நாடகத்திலும் நடிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு பின்னர் குக்வித் கோமாளியில் குக்காக வந்தார். அதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் எழிலை காதலிக்கும் அமிர்தாவாக நடித்து வருகின்றார். இந்த நாடகத்திற்கு பின்னர்இவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றது. சிவாமனசுல சக்தி, […]

You May Like