fbpx

’எதிரே வந்தால் அரிவாள் வெட்டு’..!! ’பட்டாக்கத்தியுடன் உலா வந்த ரவுடிகள்’..!! நள்ளிரவில் பயங்கரம்..!!

ஆலந்தூரில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை வெட்டியதாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சென்னையின் முக்கிய பகுதியான ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் திடீரென இருபதுக்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் ஒன்று சாலைகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்துள்ளன. அப்போது, அந்த ரவுடி கும்பல் சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அவர்கள் பட்டாக்கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

’எதிரே வந்தால் அரிவாள் வெட்டு’..!! ’பட்டாக்கத்தியுடன் உலா வந்த ரவுடிகள்’..!! நள்ளிரவில் பயங்கரம்..!!

இந்த ரவுடிகளின் அட்டகாசம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில், அவர்கள் மீதே அந்த ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் நள்ளிரவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி..!! ஓரங்கட்டிய கார் ஓட்டுநர்..!! மயங்க வைத்து பலாத்காரம்..! தூக்கி வீசிய கொடூரம்..!!

Tue Oct 11 , 2022
லிப்ட் கேட்ட கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 23 வயதான மாணவி ஒருவர் பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) அன்று மாலை கல்லூரி வகுப்பை முடித்து விட்டு மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது, சாலையில் சென்று […]

You May Like