ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகவே தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் ரஜினிக்கு போஸ்டர்கள் அடித்து மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில், ரஜினியை திருவள்ளுவர் மற்றும் குழந்தையை போல சித்தரித்தும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
![ரஜினியை குழந்தையாக மாற்றிய ரசிகர்கள்..!! பிறந்தநாள் போஸ்டர் அட்ராசிட்டி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/IMG_20221211_174601-hzt2r.jpg)
இதில், குழந்தை போல இருக்கும் போஸ்டரில் வில்லன்கள் வாழும் உலகில் குழந்தை மனம் கொண்டவரே என்ற வசனத்தையும் எழுதியுள்ளனர். மேலும், காவி உடையில் திருவள்ளூர் போல ரஜினி இருப்பது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது பொதுமக்களிடையே இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.