வேலை கிடைக்காத விரக்தியில் நேர்த்திக்கடனாக உயிரை தருகின்றேன் என வேண்டிக் கொண்ட இளைஞர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த நவீன் என்பவர் நேற்று ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தை எடுத்து வாசித்த போது, ’நான் கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கின்றேன். வேலை கிடைக்காமல் விரக்தியடைந்தேன். வேலை கிடைத்தால் என் உயிரை தருவதாக வேண்டிக்கொண்டேன். சமீபத்தில் எனக்கு வங்கியில் வேலை கிடைத்துள்ளது. கடவுளுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்துகின்றேன்’’ என எழுதியிருந்தது.
இதைக் கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலை கிடைத்ததும் இப்படியா செய்ய வேண்டும். என கதறி அழுதனர்.