fbpx

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை ? அன்பில் மகேஷ் கூறிய பதில் ..

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இது பற்றி தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தபோது அமைச்சர் அன்பில் மகேஷிடம் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படுவது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர் , தீபாவளிக்கு மறு நாள் செவ்வாய்கிழமை விடுமுறை அளிப்பது என்பது பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தது மட்டுமல்ல அனைத்து துறை பணியாளர்களுக்கும் பொருத்தமானது. எனவே இதைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்.டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவித்தார். எனவே இன்று மாலையோ , இரவோ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றுள்ளவர்கள் வசதிக்காக ஒரு நாள் விடுப்பு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இதே போல தமிழகத்திற்கும் விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுப்பு அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் முதலமைச்சர் உடன் கலந்து ஆலோசித்து தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை குறித்த அறிவிப்பை
வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.

Next Post

மாரடைப்பு ஏற்பட்டு விழுந்த விவாசியிக்கு நொடிப்பொழுதில்உயிர்கொடுத்த காவல்துறை அதிகாரி !!!

Sat Oct 22 , 2022
ஆந்திராவில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த விவசாயிக்கு காவல்துறை அதிகாரி உரிய நேரத்தில் சிபிஆர் சிகிச்சை செய்து உயிர்ப்பிக்கச்செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் அமராவதி விவசாயிகள் மகா பாதயாத்திரை நடத்தினர். அப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் கம்மன் பாலத்தில் விவசாயிகள் வந்து கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.அப்போது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஹ்மேந்திர வர்மா உரிய நேரத்தில் வந்து அவருக்கு சி.பி.ஆர் […]

You May Like