fbpx

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..!

கோவையில் விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை தெருநாய் கடித்துக் குதறியதால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84-வது வார்டில் உள்ள கரும்புக்கடை மற்றும் ஞானியார் நகர் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுமுறை தினமான நேற்று சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துக் குதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து நின்றனர். பின்னர் நாயை விரட்டி விட்டு குழந்தைகள் அனைவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..!

இதனைத் தொடர்ந்து நாய் கடித்து காயமடைந்தவர்களை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி..! மீண்டும் சாதனைப் படைத்தார் நீரஜ் சோப்ரா..!

Sun Jul 24 , 2022
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் பங்கேற்றுள்ளனர். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு இந்தியா சார்பில் அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்) பதக்கம் வென்றிருக்கிறார். வேறு யாரும் […]
வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா..! சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை..!

You May Like