பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வேளச்சேரியை அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர் விஜய் (21). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு தெரியாமல் விஜய் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை அந்தப் பெண்ணின் அண்ணன் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், அப்பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து இந்த வீடியோவை தனக்கு யாரோ அனுப்பி வைத்ததாகவும், அதனை ஃபார்வேர்ட் செய்ததாகவும் கூறியுள்ளான்.
![பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து அண்ணனுக்கு அனுப்பி வைத்த இளைஞர்..! சிக்கியது எப்படி?](https://1newsnation.com/wp-content/uploads/2021/04/Video.jpg)
இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண்ணின் அண்ணன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜய்யை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நான் தான் அந்தப் பெண் குளிக்கும்போது அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அனுப்பியதாக தெரிவித்துள்ளான். இதையடுத்து, போலீசார் விஜயை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.