திமுகவின் நீண்ட கால உறுப்பினரும், தொமுச முன்னாள் தலைவருமான இரெ.கோவிந்தசாமி காலமானார். திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவையின் அதிகாரப்பூர்வ மாத இதழ் ‘உழைப்பாளி’யின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் எம்.பி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தொழிற்சங்கச் சேவையையும், பத்திரிகை ஆசிரியர் பங்கையையும் திறம்பட தொடர்ந்ததன் காரணமாக, பல அரசியல் தலைவர்களும், ஊடகத்துறையினரும் மதிக்கும் நபராக இருந்தார். அவரது மறைவு, தொழிலாளர் நலனுக்காக நடந்த போராட்டங்களையும், அவரது தியாக மனப்பாங்கையும் மீண்டும் நினைவுகூரச் செய்கிறது. சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில், உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read more: TVK Vijay: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையுமா தவெக..? – திட்டவட்டமாக விஜய் சொன்ன பதில்



