வெறும் வயிற்றில் மட்டும் இந்த மசாலாக்களை சாப்பிடாதீங்க.!! என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

பொதுவாகவே, உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவிற்கு சுவையை கொடுப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகின்றன. அதுவும் சில மசாலாக்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆனால், அவை அனைத்தும் முதலில் பலனளித்ததாகத் தெரிந்தாலும், அது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, செரிமான அமைப்பையும் சீர்குலைக்கிறது. அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத மசாலாப் பொருட்கள் எவை என்று பார்ப்போம்.

வெந்தயம்: இது எடை இழப்பு, தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. மேலும், இது வயிற்றை சுத்தப்படுத்தும். இருப்பினும், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம். மேலும், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் ஏற்படும். இது தவிர, வயிற்றின் கீழ் பகுதியில் வலி உண்டாகும்.

கருப்பு மிளகு: இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது மற்றும் உணவின் சுவையையும் அதிகரிக்கும். இது சளி மற்றும் இருமலுக்கு நன்மை பயக்கும். ஆனால், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடலை பாதிக்கும்.

இலவங்கப்பட்டை: பொதுவாகவே, இது அனைவரது வீடுகளிலும் இருக்கும். இது உணவின் சுவையை அதிகரிக்கும். சமையலைத் தவிர, இது அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக தேநீரிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை அளவுக்கு மீறி உட்கொண்டால் கல்லீரல் பாதிப்படையும். அதிகமாக பயன்படுத்தினால் அலர்ஜி, வாய் புண், முகத்தில் வெள்ளை புள்ளிகள் போன்றவை ஏற்படும்.

ஓமம்: வயிற்றுப் பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது எடை இழப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது ஒரு சூடான மசாலா என்பதால், அதை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கோடையில் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்.

Read More : ’இது இருந்து என்ன புண்ணியம்’..? ’வருவாய் குறையுதே’..!! மூடப்படுகிறதா சார் பதிவாளர் அலுவலகம்..?

Chella

Next Post

கடலுக்கு அடியில் தபால் பெட்டி..!! தினமும் 1000 தபால் அட்டைகள்..!! இது எங்க இருக்கு தெரியுமா..?

Fri Apr 26 , 2024
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலக்கட்டத்திலும் தபால் முறைக்கு என்று தனி அங்கீகாரம் இருந்து வருகிறது. உலகின் இன்னும் கடிதத்தை தபால் முறையின் மூலம் அனுப்பதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்வை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அப்படி ஒன்றுதான் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டி. இந்த பெட்டியில் உங்களுடைய கடிதத்தை கடலுக்கு அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும். கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் இந்த தபால் பெட்டி ஜாப்பானின் […]

You May Like