”மலைகளை குடைந்து தான் சாலைகள் அமைக்க வேண்டுமா”..? சீமான் பாய்ச்சல்..!!

பெரிய முதலாளிகளின் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே சேலம் 8 வழிச்சாலையை போட பாஜக துடிப்பதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமாருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓமலூர் அண்ணா சிலை அருகே பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”சாதி மதம், கடவுளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன் நாட்டை பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்க மாட்டான்.

சேலம் 8 வழிச்சாலை கேட்டு பொதுமக்கள் யாரும் போராடவில்லை. பெரிய முதலாளிகளின் கட்டுமான பொருட்களை விரைவாக எடுத்துச் செல்லவே மத்திய அரசு 8 வழிச்சாலை போட துடிக்கிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ளது போன்று பெரிய தூண்களை அமைத்து 8 வழி அல்லது 9 வழிச் சாலைகள் கட்டிக் கொள்ளலாம். ஆனால், மலைகளை குடைந்து சாலை அமைத்து காரில் விரைவாக செல்லலாம் என்பது முட்டாள்தனமானது” என்றார்.

Read More : சந்தன மரத்தை விற்றது என் தந்தை என்றால் அதை வாங்கியது யார்..? வீரப்பன் மகள் வித்யா ராணி உருக்கம்..!!

Chella

Next Post

சென்னையில் அடுத்த ஒருவாரம் எப்படி இருக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

Wed Apr 10 , 2024
சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று […]

You May Like