காலையில் எழுந்ததும் கடுமையான தலைவலி ஏற்படுகிறதா?. ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள்!. பிரச்சனைகள் எல்லாம் பறந்துவிடும்!

headaches morning

காலையில் வரும் ஒற்றைத் தலைவலியால் பலரும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலருக்கும் இது எதனால் வருகிறது எனத் தெரிவதில்லை. ஏன் உங்களுக்கு தலைவலி வருகிறது என்பது குறித்து பார்க்கலாம். காலையில் தலைவலியோடு இருப்பது அன்றைய நாளையே மோசமாகிவிடும். இதனால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் திணறிப் போவீர்கள்.


பொதுவாக மக்களுக்கு பல வகையான தலைவலிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, ஹிப்னிக் தலைவலி, பதட்டத்தில் ஏற்படும் தலைவலி மற்றும் பராக்ஸிஸ்மல் தலைவலி என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தலைவலி எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் இரவு நேரத்தில் சரியாக தூங்கவில்லை என்றால், காலையில் தலைவலியோடுதான் எழும்புவீர்கள். நீண்ட நாட்களாக சரியான தூக்கம் இல்லாதவர்கள் இன்சோம்னியாவால் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரக்கூடும், அதுவும் காலை நேரங்களில் அதிகப்படியாக இருக்கும். இந்தப் பிரச்சனையிலிருந்து மீள சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகமான நேரம் தூங்கினாலும் தலைவலி உண்டாகும். இப்படிச் செவது உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். ஆனால் நீங்கள் அதிக நேரம் தூங்கும் போது உங்களின் இயற்கையான சர்காடியன் ரிதத்தில் சிக்கல் உண்டாகி, உங்களின் தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தலைவலி உண்டாகிறது.

அதிக மன அழுத்த அளவுகள் பெரும்பாலும் தலைவலியைத் தூண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், எழுந்த பிறகு தலைவலி ஏற்படலாம். சைனஸ் தொற்றுகள் அல்லது நெரிசல் காலை தலைவலியை ஏற்படுத்தும். வேறு சில நோய்கள் அல்லது நிலைமைகள் தலைவலியை ஏற்படுத்தும்.

பலர் தலையில் பாரம் அல்லது வலியை உணர்ந்து எழுந்திருப்பது வழக்கம். சில நேரங்களில், முந்தைய இரவு அதிகமாக மது அருந்துவதால் இது ஏற்படுகிறது, இது ஹேங்கொவர் தலைவலிக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஏதாவது சாப்பிடுவது அல்லது எலுமிச்சைப் பழம் அல்லது ஐஸ்கிரீம் உட்கொள்வது நிவாரணம் அளிக்கும்.

அடிக்கடி காலை தலைவலி ஏற்படுவதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அவை சில நேரங்களில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம் அல்லது முந்தைய தலை காயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். நீங்கள் இதை மீண்டும் மீண்டும் அனுபவித்தால், ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம்.

Readmore: ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி.. முதல் பரிசு ரூ.10,000..!! – பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

KOKILA

Next Post

முதல் நாளே புத்தகம்... கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று முதல் திறப்பு...!

Mon Jun 2 , 2025
கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு முதல் நாளான இன்றே பாட புத்தகம் வழங்கப்பட உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி […]
school books 2025

You May Like