வாஸ்து சாஸ்திரத்தில் மெயின் கதவு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது நல்ல ஆற்றல் மற்றும் செழிப்பிற்கான நுழைவுப் புள்ளியைக் குறிக்கிறது. வாஸ்து கொள்கைகளின்படி, நன்கு வடிவமைக்கப்பட்ட சரியாக வைக்கப்பட்டுள்ள மெயின் வாசல் நல்ல அதிர்வுகளின் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இணக்கமான வாழ்க்கை சூழலைத் தரும். இந்த ப்ளாகில், மெயின் வாசல் வாஸ்துவின் இடம், திசை, அளவு, பொருள், நிறம், பெயர்ப்பலகை, படிகளின் எண்ணிக்கை, வைக்க வேண்டிய கடவுள் சிலைகள் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராயலாம். இந்த வாஸ்து யோசனைகளைச் செயல்படுத்துவதன் மூலம், உங்கள் மெயின் வாசல் வாஸ்து கொள்கைகளுக்கு இணங்கச் செய்து, உங்கள் வீட்டிற்கு நல்ல ஆற்றலை ஈர்க்கும் நம்பிக்கை உள்ளது.
ஆனால், யாராவது வாசற்படியில் அமர்ந்தால் பெரியவர்கள் வேண்டாம் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அது ஏன் என்று தெரியுமா?. தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். வீட்டின் தலை வாசலில் இருபுறங்களிலும் விளக்கு ஏற்றி வைப்பது பண்டைய கால வழக்கமாக நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த இரண்டு புறங்களிலும் கும்ப தேவதைகள் அமர்ந்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த தேவதைகளை குளிர்விக்கவே அப்பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அவர்களை வணங்குவதற்காகவே வீட்டின் தலைவாசலை குள்ளமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கும்ப தேவதைகளை வணங்கி செல்லுவதற்கு தான் இவ்வாறு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டன.
அது போல எப்படி நம் கோயில்களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டி உள்ளே செல்கிறோமோ அதே போல் தான் வீடு என்னும் கோவிலில் வாசல் படிகளை தாண்டி உள்ளே செல்லவேண்டும். நம் வீட்டின் நிலைவாசல் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்கு தான். அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலைவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது.
அது போல் ஒருபோதும் நிலவாசல் படியில் அமரக் கூடாது. வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக் கூடாது, தரித்திரம் ஏற்படுத்தும் என்பார்கள். அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றை செய்தால் வீட்டில் தரித்திரம் தான் உண்டாகும்.
Readmore: பணத்தைப் போல தூக்கத்தையும் சேமிக்க முடியும்..!! ஆமா.. அது என்ன SLEEP BANKING..? – நிபுணர் விளக்கம்