மாதம் ₹6000 குறைவாக வருமானம் ஈட்டும் ஏழை குடும்பங்களுக்கு, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தலா ₹2 லட்சம் நிதி உதவி வழங்க, பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 20 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணையான ₹50,000த்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இவற்றில் பிகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, 94 லட்சம் குடும்பங்களின் வருமானம் மாதத்திற்கு ₹6,000த்தை விடக் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. […]