இந்த அறிகுறிகள் உடலில் தோன்றினால் கல்லீரலில் பிரச்சனை இருக்குமாம்..!! – எச்சரிக்கும் மருத்துவர்

Main fatty liver

மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல் ஆகும். இது நமது உடலில் நச்சுக்கள் வெளியேற்றம், பித்த நீர் உற்பத்தி, செரிமானம், ஆரோக்கிய குருதி சுழற்சி போன்ற பல அத்தியாவசிய செயல்களை நிறைவேற்றுகிறது. இந்த அளவிற்கு முக்கிய பங்காற்றும் கல்லீரல், நாம் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் மிகவும் எளிதாக பாதிக்கப்படலாம்.


எப்படி கல்லீரல் பாதிக்கப்படுகிறது? நாம் உண்பது, பருகுவது, வாழும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நேரடியாக கல்லீரல் மீது தாக்கம் செலுத்துகின்றன.

  • அதிக எண்ணெய், காரம், பிரெசர்ஸ் உணவுகள்
  • அடிக்கடி மதுபானம் அருந்துவது
  • பயிற்சி இல்லாத மந்தமான வாழ்க்கை
  • தூக்கமின்மை, மனஅழுத்தம்

இவை அனைத்தும் கல்லீரலை மெதுவாக விஷமாக்குகின்றன. மேலும் ஒருவரது கல்லீரலில் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். ஆனால் அந்த அறிகுறிகள் தினசரி நாம் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று இருப்பதால், பெரும்பாலானோர் அதை சாதாரணமாக நினைத்து புறக்கணித்துவிடுகின்றனர்.

இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் காவ்யா டெண்டுகுரி, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒருவரது கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் வெளிப்படும் எச்சரிக்கை அறிகுறிகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த அறிகுறிகள் என்னவென்பதை இப்போது காண்போம்.

அதில் அவர் கூறியதாவது, “பெரும்பாலானோர் உடலின் நுட்பமான SOS சமிக்ஞைகளை புறக்கணிக்கிறார்கள். அதுவும் பெரும்பாலானோர் மன அழுத்தம் அல்லது வயது என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் இப்படி வெளிக்காட்டும் அறிகுறிகளானது கல்லீரல் நச்சுக்களை நீக்கவும், ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்தவும், மெட்டபாலிசத்தை சமநிலையில் பராமரிக்கவும் போராடிக் கொண்டிருக்கிறது என்பதன் ஆரம்ப கால அறிகுறிகளாகும். கல்லீரலில் இருக்கும் பிரச்சனைகளை வெளிக்காட்டும் அறிகுறிகள் சாதாரணமாக இருந்தாலும், இதை புறக்கணிக்கும் போது தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என்று கூறினார்.

ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்:

சோம்பல் அல்லது வயிற்று உப்புசம்: தினமும் காலையில் எழும் போது வயிற்று உப்புசத்துடன் அல்லது மிகுந்த சோம்பலுடன் எழுந்தால், முக்கியமாக குமட்டல், பசியின்மை போன்ற அறிகுறிகளையும் சந்தித்தால், கல்லீரல் மோசமான நிலையில் இருக்க வாய்ப்புள்ளது.

கை, கால் வீக்கம்: எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து வாந்தி, குமட்டலை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் அடிக்கடி கை, கால்களில் வீக்கத்தை சந்தித்தால், அது கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம்.

பொலிவிழந்த முகம்: உங்கள் முகம் வழக்கத்திற்கு மாறாக பிம்பிள், அதிக வறட்சி மற்றும் சரும நிறம் கருமையாக மாறி வந்தால், அது உங்கள் கல்லீரலில் இருந்து வரும் நேரடி சமிக்ஞையாக இருக்கலாம். இது கல்லீரல் அழுத்தத்துடன் தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பின் பொதுவான அறிகுறியாகும். எனவே உங்கள் அக்குள், கழுத்து போன்ற பகுதிகள் கருமையாக மாறினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

உடல் சோர்வு: தினமும் இரவு போதுமான தூக்கத்தை மேற்கொண்டும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீஙர்களா? எதுவாக இருந்தாலும் உங்கள் ஆற்றல் அளவுகள் குறைவாக இருந்தால், உங்கள் கல்லீரல் மூல காரணமாக இருக்கலாம்.

ஹர்மோன் ஏற்றத்தாழ்கள் பிசிஓஎஸ், தைராய்டு பிரச்சனைகள், இன்சிலின் எதிர்ப்புத்தன்மை, மோசமான மெட்டபாலிசம் போன்றவை ஒருவரது கல்லீரல் மோசமான நிலையில் இருப்பதன் அறிகுறியாகும். எனவே இந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுகங்கள்.

Read more: நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டம்.. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு ?

Next Post

திமுகவை ஆட்டம் காண வைத்த முருக பக்தர்கள் மாநாடு.. ஸ்டாலின் பொய் பிரச்சாரம்.. அண்ணாமலை காட்டம்..

Tue Jun 24 , 2025
மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் […]
67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

You May Like