Cooku With Comali 5 நிகழ்ச்சியின் கோமாளிகள் யார் தெரியுமா..? அதிரடியாக வெளியான வீடியோ..!!

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்க இருக்கிறது. இதில், செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாகக் களமிறங்க இந்த சீசனின் கோமாளிகள் சிலரை அறிமுகப்படுத்தி புரோமோ வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ’குக் வித் கோமாளி’ சீசன் 5 இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹிட்டே சமையல் தெரியாத கோமாளிகளின் கலகலப்பூட்டும் தொல்லைகள்தான். சமையல் கொஞ்சம், சிரிப்பு நிறைய என்ற கான்செப்ட்தான் 4 சீசன்கள் கடந்து 5-வது சீசன் வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து 4-வது சீசன் வரை வழக்கமான கோமாளிகள் தொடர்ந்து வந்தனர்.

இவர்களோடு புதிதாக சிலரும் கோமாளிகளாக இணைந்தனர். இதனால், ஒவ்வொரு சீசனிலும் கோமாளிகள் யார் என்பது குறித்தான புரோமோவை நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே தொலைக்காட்சி தரப்பு ஒளிபரப்பும். அந்த வகையில், இந்த சீசனில் சீனியர் கோமாளிகள் இருப்பதை உறுதி செய்துள்ள நிகழ்ச்சி தரப்பு அவர்களுக்கான கலகலப்பான புரோமோவை வெளியிட்டுள்ளது. கடந்த சீசனில் ’இனி கோமாளியாக வர மாட்டேன்’ என சபதம் செய்து வெளியேறிய மணிமேகலை இந்த சீசனில் ரக்‌ஷனுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இவர்களுடன் சுனிதா, குரேஷியும் கோமாளிகளாக என்ட்ரி கொடுக்கிறார்கள். இவர்கள் மாஸாக விமானத்தில் இருந்து இறங்க, ‘ரெண்டு, மூனு சீசன் வர நமக்கே இப்படி வரவேற்பு என்றால், ஐந்து சீசனாக வர புகழுக்கு என்ன பண்ணப் போறாங்களோ!’ என இவர்கள் ஜெர்க் ஆகி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே கட் செய்தால், இந்த நிகழ்ச்சியின் சீனியர் மோஸ்ட் கோமாளியான புகழ் பஞ்சர் ஒட்டிய சைக்கிளை கஷ்டப்பட்டு மிதித்துக் கொண்டு வருகிறார். நடிகர் ராமர் ’இனி கோமாளியாக தொடர்வேன்’ எனச் சொல்லி அவரிடம் லிஃப்ட் கேட்டு நிகழ்ச்சிக்கு வருகிறார் என கலகலப்பான இந்த புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

Read More : செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் அதிரடி உயர்வு..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Chella

Next Post

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைப்பு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Thu Mar 28 , 2024
சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு மீதான பரிசீலனை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  வேட்பாளராக போட்டியிடுபவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால், மக்கள் […]

You May Like