ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா?… தைராய்டு பிரச்சனையை போக்கும் பூசணி விதை!… இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

நாம் தூக்கி எறியும் பூசணி விதைகளை தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை போக்கி, ஆழ்ந்த உறக்கத்தையும் அளிக்கிறது. மேலும் இதிலுள்ள நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும்.மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையானஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது
தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்கள்.

2021ஆம்ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள். தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.

அயோடின் போன்ற சில ஊட்டச்சத்துக்களின் குறைபாடு தைராய்டு செயலிழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பராமரிக்க ஒரு சீரான உணவை உட்கொள்வது முக்கியமாகும். மேலும், அயோடினைத் தவிர, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. தைராய்டு நோயைக் கட்டுப்படுத்த, பழங்கள் மற்றும் காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அந்தவகையில், தைராய்டு செயல்பாட்டை உறுதி செய்வதிலும், தைராய்டு அளவை ஒழுங்குபடுத்துவதிலும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக தைராய்டுதிசுக்களைப் பாதுகாப்பதிலும் முந்தரி பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

தினந்தோறும் இரவில் 4-5 முந்திரி பருப்புகளை சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனை சற்று குறையும்.சர்க்கரை அளவை சீராக்க உதவும் தேங்காய் துண்டுகளை தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பூசணி விதைகளில் துத்தநாக சத்து அதிகளவு உள்ளதால், இது தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபானின், தூக்கத்தை ஊக்குவிக்கும் அமீனோ அமிலமாகும். வறுத்த பூசணி விதைகளை தினமும் உட்கொண்டு வந்தால் ஆழ்ந்த உறக்கத்தை அளித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. வறுத்த பூசணி விதைகளை இரவில் சாப்பிட்டு வருவது நல்லது.

நாள்தோறும் சிறிதளவு சியா விதைகளை ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி தொடர்பான நிலைமைகளான ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸ், டிகுவெர்வின் தைராய்டிடிஸ் அல்லது தைராய்டின் பிற வீக்கத்தை குறைக்க பயன்படுகிறது.

Kokila

Next Post

8வது, பிளஸ் டூ மற்றும் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு!

Tue Feb 14 , 2023
புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக அங்கிருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு இரண்டு […]

You May Like